​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளிவரும் வகையில் வழக்கு பதிந்தால் நடவடிக்கை"- காவல்துறையினருக்கு எச்சரிக்கை

Published : Mar 03, 2023 5:28 PM

"குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளிவரும் வகையில் வழக்கு பதிந்தால் நடவடிக்கை"- காவல்துறையினருக்கு எச்சரிக்கை

Mar 03, 2023 5:28 PM

புதுச்சேரியில் குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளிவரும் வகையில் வழக்குப்பதிவு செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளியே வராதபடி கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டுமென்றார்.

குற்றவாளிகள் எளிதில் வெளியே வரும் வகையில் வழக்குப் பதிந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது தானே நேரடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.